ராகுல்காந்தி குறித்து அவதூறான கருத்துக்கள் பரப்பியதாக பாஜக நிர்வாகி கைது
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறித்து, சமூக ஊடகங்களில் அவதூறான கருத்துக்களை பரப்பியதாக, பாஜக நிர்வாகி ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
HIGHLIGHTS
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறித்து, சமூக ஊடகங்களில் அவதூறான கருத்துக்களை பரப்பியதாக, பாஜக நிர்வாகி ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
சமீபகாலமாக அரசியல் தலைவர்கள் குறித்து சமூக ஊடகங்களில், அவதூறான கருத்துக்களை பதிவிடுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் பிரவீன்ராஜ். இவர் பாஜக இளைஞரணி சமூக ஊடக பொறுப்பாளராக உள்ளார். இவர் கடந்த ஆக. 10ம் தேதி எக்ஸ் தளத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எம்.பி குறித்து அவதூறான கருத்துக்களை பதவிட்டடாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து, கரூர் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரவீன்ராஜை தேடிவந்தனர். இந்த நிலையில் இன்று 1ம் தேதி அதிகாலை 2 மணியளவில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகில் உள்ள முத்துக்காளிப்பட்டியில் உள்ள அவரது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போலீசார் பிரவீன்ராஜை, போலீசார் கைது ö சய்து கரூர் அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். பாஜக இளைஞரணி சமூக ஊடக பொறுப்பாளர் பிரவீன்ராஜ் கைது செய்யப்பட்ட சம்பவம் நாமக்கல் மாவட்ட பாஜகவினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.