வரும் 5ம் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்: ஜாக்டோ ஜியோ சங்க கூட்டத்தில் தீர்மானம்
கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 5ம் தேதி முதல், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்ட ஜாக்டோ ஜியோ இணைப்பு சங்கங்களின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் க. பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஓருங்கிணைப் பாளர்கள் ராஜேந்திர பிரசாத், ரவீந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், வரும் ஆக.5ம் தேதி, தமிழக அரசின் ஆசிரியர், அரசு ஊழியர் விரோத போக்கை கண்டித்தும், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் நாமக்கல்லில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில், புதிய ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தினை நிறைவேற்ற வேண்டும். அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும். ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பினை ரத்து செய்ததை உடனடியாக திருப்பி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
ஜாக்டோ ஜியோ இணைப்பு சங்க நிர்வாகிகள் ராமு, அத்தியப்பன், தமிழ்மணி, முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.