/* */

வரும் 5ம் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்: ஜாக்டோ ஜியோ சங்க கூட்டத்தில் தீர்மானம்

கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 5ம் தேதி முதல், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

HIGHLIGHTS

வரும் 5ம் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்: ஜாக்டோ ஜியோ சங்க கூட்டத்தில் தீர்மானம்
X

பைல் படம்

நாமக்கல் மாவட்ட ஜாக்டோ ஜியோ இணைப்பு சங்கங்களின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் க. பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஓருங்கிணைப் பாளர்கள் ராஜேந்திர பிரசாத், ரவீந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், வரும் ஆக.5ம் தேதி, தமிழக அரசின் ஆசிரியர், அரசு ஊழியர் விரோத போக்கை கண்டித்தும், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் நாமக்கல்லில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில், புதிய ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தினை நிறைவேற்ற வேண்டும். அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும். ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பினை ரத்து செய்ததை உடனடியாக திருப்பி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

ஜாக்டோ ஜியோ இணைப்பு சங்க நிர்வாகிகள் ராமு, அத்தியப்பன், தமிழ்மணி, முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 1 Aug 2022 10:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு