Begin typing your search above and press return to search.
நாமக்கல் மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
நாமக்கல் மாவட்டத்தில் சாதனை புரிந்தவர்கள் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
HIGHLIGHTS
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் சாதனை புரிந்தவர்கள் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
குடியரசு தினத்தை முன்னிட்டு, ஆண்டுதோறும் தமிழகத்தில் பத்ம விருதுகள் வழங்கப்படுகிறது. கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், தொழில்துறை, குடிமைப்பணி, மனித உரிமைகளைப் பாதுகாத்தல் போன்ற துறைகளில் தனித்துவமான மற்றும் விதிவிலக்கான சாதனைகள், சேவைகளை அங்கீகரிக்கும் வகையில் இந்த பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த விருதுக்கு தகுதி உள்ள பயனாளிகள் விண்ணப்பிக்கலாம். ததியுள்ளவர்கள் வருகிற செப்.15க்குள் ஆன்லைன் மூலம் வின்னப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.