நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் 40 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்து பசுமை நினைவுகளை பகிர்ந்துகொண்டனர்
HIGHLIGHTS
தமிழகம் முழுவதும் கடந்த 1978ம் ஆண்டு, 11ம் வகுப்பு முடிந்து பியுசி படிக்கும் முறை ஒழிக்கப்பட்டு, 10ம் வகுப்புக்கு பிறகு +2 படிப்பு முறை கொண்டு வரப்பட்டுது. நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பியில் பிளஸ் 2 படிப்பு முதல் பேட்ச் கடந்த 1978 முதல் 1980ம் ஆண்டு வரை நடைபெற்றது.
40 ஆண்டுகளுக்குப்பிறகு, அப்போது பிளஸ் 2 வகுப்பில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நாமக்கல்லில் நடைபெற்றது. நாமக்கல் தெற்கு மேல்நிலைப்பள்ளியில் படித்து, தற்போது தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் காவல்துறை, கோவை வேளாண் பல்கலை, குடிநீர் வாரியம், ஆசிரியர் பணி உள்ளிட்ட முக்கிய அரசு பதவிகளில் பணியாற்றி வருபவர்களும், தனியார் பள்ளி நிர்வாகிகள், தனியார் கம்பெனிகளில் பணிபுரிந்து வருபவர்களும், லாரி, கோழிப்பண்ணை உள்ளிட்ட தொழிலதிபர்களாகவும் உள்ள முன்னாள் மாணவர்கள் சந்தித்து தங்களின் பசுமையான நினைவுகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டனர்.
ஒவ்வொருவரும் தங்கள் குடும்பம், குழந்தைகள், அவர்களின் படிப்பு உள்ளட்டவை குறித்தும், பள்ளியில் படிக்கும் போது நடந்த சுவையான அனுபவங்கள் குறித்தும், மலரும் நினைவுகளாக பகிர்ந்து கொண்டனர். 60 வயதைக் கடந்த சீனியர் மாணவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டது.
சுமார் 100 முன்னாள் மாணவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு குரூப் போட்டோ எடுத்துக்கொண்டனர். அனைவருக்கும் நினைவுப்பரிசு மற்றும் மூலிகைத்தாவரம் வழங்கப்பட்டது. முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் என்.சுப்பிரமணியன், செயலாளர் கே.சுப்பிரமணியன், பொருளாளர் பாண்டுரங்கள் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.