/* */

நாமக்கல் : அதிமுக முன்னாள் எம்.பி., பி.ஆர்.சுந்தரம் திமுகவில் ஐக்கியம்: முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் சேர்ந்தார்

நாமக்கல் மாவட்ட அதிமுக அவைத் தலைவரும், முன்னாள் எம்.பியுமான பி.ஆர்.சுந்தரம் திமுகவில் இணைந்தார்.

HIGHLIGHTS

நாமக்கல் : அதிமுக  முன்னாள் எம்.பி., பி.ஆர்.சுந்தரம் திமுகவில் ஐக்கியம்: முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் சேர்ந்தார்
X

நாமக்கல் மாவட்ட அதிமுக அவைத்தலைவர் பி.ஆர்.சுந்தரம், சென்னையில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார். அருகில் திமுக பொது செயலாளர் துரைமுருகன், பொருளாளர் பாலு, நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ராஜேஷ்குமார், சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர்.

நாமக்கல் :

நாமக்கல் மாவட்ட அதிமுக அவைத் தலைவரும், முன்னாள் எம்.பியுமான பி.ஆர்.சுந்தரம் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

நாமக்கல் மாவட்ட அதிமுக அவைத்தலைவராக இருந்தவர் பி.ஆர்.சுந்தரம். 19966ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றிபெற்ற 4 எம்எல்ஏக்களில் இவரும் ஒருவர். இவர் ராசிபுரம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றிபெற்றார். பின்னர் 2014ம் ஆண்டு நாமக்கல் லோக்சபா தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற எம்.பியானார். அடுத்து நடைபெற்ற லோக்சபா தேர்தலில் போட்டியிட கட்சி இவருக்கு சீட் தரவில்லை. இதைத்தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலில் நாமக்கல் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிபெற்று மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவராக பணியாற்றி வந்தார். கடந்த சட்டசபை தேர்தலில் போது மாவட்ட ஊராட்சித் துணைத்தலைவர் பதவியை ராஜினாமாசெய்துவிட்டு சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட சீட் கேட்டார். அவருக்கு சீட் தரவில்லை. இதனால் அதிருப்தியில் இருந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பி.ஆர்.சுந்தரம் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். அப்போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ராஜேஸ்குமார், சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.

Updated On: 11 July 2021 7:30 AM GMT

Related News