Begin typing your search above and press return to search.
நாமக்கல்லில் இருச்சக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்
நாமக்கல் அடுத்துள்ள பொட்டணம் பகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் பாஸ்கர் இருச்சக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தார்.
HIGHLIGHTS
தமிழகம் முழுவதும் வருகின்ற ஏப்ரல் 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் நாமக்கல் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரும் தற்போதைய எம்.எல்.ஏவுமான கே.பி.பி. பாஸ்கர் நாமக்கல் அடுத்துள்ள பொட்டணம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அதிமுக நிர்வாகி ஒருவரின் இருச்சக்கர வாகனத்தில் பின்புறம் அமர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்..இதனையடுத்து அப்பகுதி பெண்கள் ஆராத்தி எடுத்து அவரை வரவேற்றனர்.
அதிமுக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர் அப்பகுதி பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து வெற்றிப் பெற்றவுடன் குறைகளை நிவர்த்தி செய்வதாகவும் வாக்குறுதி அளித்தார்.