Begin typing your search above and press return to search.
உதவி வேளாண் அலுவலர்கள் சங்கத்தின் மண்டல அளவிலான ஆலோசனைக் கூட்டம்
தமிழ்நாடு உதவி வேளாண் அலுவலர்கள் சங்கத்தின், மண்டல அளவிலான மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், நாமக்கல்லில் நடைபெற்றது.
HIGHLIGHTS
மாவட்டத் தலைவர் சேகர் தலைமை வகித்தார். மாநில தலைவர் அருள், பொதுச்செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் கோரிக்கை குறித்து பேசினர். கூட்டத்தில், விவசாயிகளின் நலனுக்காக, வேளாண், தோட்டக்கலை, வேளாண் விற்பனை என, மூன்று துறைகளையும் ஒருங்கிணைத்து மறு சீரமைப்பு செய்ய வேண்டும்.
வரும், ஆகஸ்டில், சென்னை அல்லது கடலூர் மாவட்டத்தில், மாநில மாநாடு நடத்துவது, அதில், தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ஆகியோர் அழைப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட செயலாளர் சிவக்குமார், பொருளாளர் மோகன்ராஜ், நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.