நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடத்திய முன்னாள் எம்எல்ஏ உட்பட 522 பேர் மீது வழக்கு
நாமக்கல் மாவட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் எம்எல்ஏ உள்ளிட்ட 522 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
HIGHLIGHTS
ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்க தமிழக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் ஆங்காங்கே அதிமுவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலையுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு, பள்ளிபாளையம், ராசிபுரம், மோகனூர், பரமத்திவேலூர், கந்தம்பாளையம் உள்ளிட்ட 14 இடங்களில் அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொரோனா தடுப்பு விதிகளை மீறி கூட்டத்தைக் கூட்டி அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக, திருச்செங்கோடு முன்னாள் எம்.எல்.ஏ. பொன் சரஸ்வதி உட்பட 50 அதிமுகவினர் மீது திருச்செங்கோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும், மாவட்டம் முழுவதும் அ.தி.மு.க.வினர் 522 பேர் மீது அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக சம்மந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.