75வது சுதந்திரதின விழாவை முன்னிட்டு 1 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை
நாமக்கல்லில், 75-வது சுதந்திரதின விழாவை முன்னிட்டு 1,000 மாணவ,- மாணவியர் தொடர்ந்து ஒரு மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர்.
HIGHLIGHTS
நாமக்கல்லில், 75-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, சிலம்பம் பயிற்சி பெற்ற, 1,000 மாணவ,- மாணவியர் பங்கேற்று, தொடர்ந்து ஒரு மணி நேரம் சிலம்பம் சுற்றும் சாதனை நிகழ்ச்சி, மாவட்ட நேரு யுவ கேந்திரா, பாரதமாதா சிலம்பம் பயிற்சி மன்றம் சார்பில் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 1,000 மாணவ, மாணவியர் பங்கேற்று சிலம்பம் சுற்றினர். சிலம்ப பயிற்சியாளர்களின் கட்டளைக்கு ஏற்ப பல்வேறு விதமான சிலம்ப ஆட்டங்களை, அவர்கள் வெளிப்படுத்தினர்.
தொடர்ந்து, ஒரு மணி நேரம், இடைவெளியின்றி, பல்வேறு சிலம்பக் கலைகளை, போட்டியாளர்கள் தொடர்ச்சியாக வெளிப்படுத்தி சாதனைபுரிந்தனர். போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. பாரதமாதா சிலம்பம் பயிற்சி பள்ளித் தலைவர் டாக்டர் எழில்செல்வன், மாவட்ட நேரு யுவ கேந்திரா ஆலோசனைக் குழு உறுப்பினர் தில்லைசிவக்குமார், சிலம்பம் பயிற்சி பள்ளி செயலாளர் கார்த்திகேயன், நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய உதவி பேராசிரியர் பால்பாண்டி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.