நாமக்கல்லில் 5.37 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு: கலெக்டர் தகவல்
நாமக்கல்லில் நாளை முதல் 5.37 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டத்தில் நாளை முதல், 5 லட்சத்து 37 ஆயிரம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு ரேசன் கார்டுதாரர்களுக்கு, 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிறது. இதனை நாளை தமிழக முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார். இதைத்தொடர்ந்து அந்தந்த மாவட்டத்தில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் நாளை 4ம் தேதி முதல் ரேசகன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்பட உள்ளது. இப்பரிசுப் பொருட்கள் தரமாக உள்ளதா, சரியான அளவில் உள்ளதா என்பதை நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது: நாமக்கல் மாவட்டத்தில் இலங்கை தமிழர்கள் உள்பட 5 லட்சத்து 37 ஆயிரத்து 510 ரேசன் கார்டுதாதரர்கள் உள்ளனர்.
தமிழக அரசின் சார்பில், அனைவருக்கும் கரும்பு மற்றும் 21 பொருட்கள் அடங்கிய பரிசுப் பொருட்கள் வழங்கப்பட உள்ளது. நாள்தோறும் 200 ரேசன்கார்டுதாரர்கள் வீதம் பொருட்கள் வழங்கப்படும். பொதுமக்கள் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை அனுசரித்து பொருட்களை வாங்கிச் செல்லலாம் என்று தெரிவித்தார்.