2.0 திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேளாண் அலுவலர் சங்கத்தினர் கோரிக்கை
2.0 திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என மாவட்ட வேளாண் அலுவலர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
HIGHLIGHTS
தமிழக வேளாண் பட்ஜெட்டில் தெரிவித்தபடி, அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து 2.0 திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என மாவட்ட வேளாண் அலுவலர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாவட்ட வேளாண் உதவி அலுவலர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம், நாமக்கல்லில் நடைபெற்றது. சங்கத் தலைவர் சேகர் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் கோபிநாத் வரவேற்றார். மாவட்ட துணைத்தலைவர் ரவி, பொருளாளர் மோகன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், வரும், 21ம் தேதி, ஓசூரில் நடக்கும் மாநில பொதுக்குழு கூட்டத்தில், பொதுக்குழு உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். வேளாண் பொறியியல் துறையில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களில், பவர் டில்லர் வினியோகம், பண்ணை குட்டை அமைத்தல், ஆதிதிராவிட விவசாயிகளுக்கு போர்வெல் கிணறு அமைத்தல் போன்ற திட்டங்களை, உதவி வேளாண் அலுவலர்களுக்கு, இலக்கு நிர்ணயம் செய்ய வற்புறுத்துவதை கைவிட வேண்டும்.
தமிழக வேளாண்மை பட்ஜெட்டில் தெரிவித்தபடி, அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து, 2.0 திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில், பி.எம்.கிஷான் திட்டத்தில், பாதிப்படைந்த இருவர் மீது போடப்பட்ட, 17 பி குறிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. திரளான வேளாண் அலுவலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.