/* */

மோகனூரில் செல்போனை திருடிய 2 வாலிபர்கள் கைது

மோகனூரில் வீட்டிற்குள் இருந்த செல்போனை திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

மோகனூரில் செல்போனை திருடிய 2 வாலிபர்கள் கைது
X

மோகனூர் வள்ளியம்மன் கோவில் அருகே உள்ள பெரியார் நகர் காலனியை சேர்ந்தவர் சந்தோஷ் குமார் (31). விவசாயியான இவர் சம்பவத்தன்று தனது வீட்டில் இருந்து வெளியே வந்தேபோது, ஜன்னல் வழியாக 2 வாலிபர்கள் கையை விட்டு வீட்டிற்குள் செல்போன் திருட முயல்வதை பார்த்தார். இதையடுத்து 2 பேரையும் பிடிக்க முயன்றபோது, அவரது பிடியில் இருந்து நழுவி 2 வாலிபர்களும் தப்பி ஓட முயன்றனர்.

ஆனால் சந்தோஷ்குமார் சத்தம்போடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து 2 பேரையும் பிடிக்க முயற்சித்தனர். ஆனால் 2 வாலிபர்களும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அங்கிருந்தவர்களை மிரட்டி விட்டு தப்பியோடினர். அப்போது அங்கு கிடந்த கல்லில் அடிபட்டு கால் இடறி 2 வாலிபர்களும் கீழே விழுந்தனர்.

இதையடுத்து அவர்களை பிடித்த அப்பகுதி பொதுமக்கள் மோகனூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரனையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் மகன் விக்ரம் (வயது 19), ரங்கசாமி மகன் லோகேஸ்வரன் (19) என்பது தெரியவந்தது.

பின்னர் செல்போன் திருட முயன்றதாக 2 வாலிபர்களையும் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் கைது செய்தார். இதையடுத்து 2 பேரும் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டு, பரமத்தி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

Updated On: 28 Jun 2021 4:00 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!