17 வயது செவிலியரை கடத்தி திருணம்: நிதி நிறுவன ஊழியர் கைது
நாமக்கல்லில் 17 வயது செவிலியரைக் கடத்திசென்று திருமணம் செய்த தனியார் பைனான்ஸ் ஊழியரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
HIGHLIGHTS
நாமக்கல்லில் உள்ள, தனியார் ஆஸ்பத்திரியில் 17 வயது சிறுமி பயிற்சி செவிலியராக பணியாற்றி வந்தார். இவரை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வாலிபர் ஒருவர் கடத்திச் சென்றார்.
இதுகுறித்து நர்சின் பெற்றோர் நாமக்கல் போலீசில் புகார் அளித்தனர். மேலும், அவரை கண்டுபிடித்து தரக்கோரி நாமக்கல் கோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. நர்சு கடத்தல் தொடர்பாக நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
செவிலியரை கடத்திச் சென்றது, நாமக்கல்லில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றும், கரூர் மாவட்டவத்தைச் சேர்ந்த அருண்குமார் (44) என்பது விசாரணையில் தெரியவந்தது.
மேலும் செவிலியரை திருமணம் செய்து, பாலியல் பலாத்காரம் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, திருச்சி மாவட்டம், நாகநல்லூரில் இருந்த அருண்குமாரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் செய்தனர்.