கொங்குநாடு பி.எட் கல்லூரியில் 11வது பட்டமளிப்பு விழா
கொங்குநாடு பி.எட் கல்லூரியில் நடைபெற்ற பட்மளிப்பு விழாவில், பெரியார் பல்கலை துணைவேந்தர் குழந்தைவேல் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார்.
HIGHLIGHTS
வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு பி.எட் கல்லூரியின் 11வது பட்டமளிப்புடு விழா, கல்லூரி நிறுவனர் டாக்டர் ராஜன் தலைமையில் நடைபெற்றது. கொங்குநாடு கல்வி நிறுவனங்களின் இயக்குனர் ராஜேந்திரன், பொருளாளர் ராஜராஜன், தலைவர் ராஜா மற்றும் செயலாளர் சிங்காரவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் டாக்டர் சாந்தி வரவேற்றார்.
பெரியார் பல்கலைத் துணைவந்தர் டாக்டர் குழந்தைவேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிப் பேசினார். அப்போது, ஆசிரியர்கள் செய்யும் செயலில் தவறு இல்லாமல் சரியான முறையில் செயல்பட வேண்டும். தன்னை அறிந்தவன் ஆசைப்படமாட்டான், உலகத்தை அறிந்தவன் கோபப்படமாட்டான் எனக் கூறினார். நிகழ்ச்சியில், கொங்குநாடு கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.