/* */

உரிய ஆவணங்களின்றி எடுத்து சென்ற 2.37 லட்சம் பறிமுதல்

உரிய ஆவணங்களின்றி எடுத்து சென்ற 2.37 லட்சம் பறிமுதல்
X

நாமக்கல்லில் உரிய ஆவணங்களின்றி கோழி பண்ணையாளர் எடுத்துச்சென்ற ரூ 2.37 லட்சம் பறிமுதல் செய்த பறக்கும் படையினர்.

சட்டமன்ற தேர்தலையொட்டி பணம் மற்றும் பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளனர். இதன் கீழ் நாமக்கல் அடுத்த கொண்டி செட்டிபட்டி குனியமரத்தான் கோவில் அருகே வட்ட வழங்கல் அலுவலர் ரவி தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்பர் ரைட், தலைமை காவலர் சிவக்குமார், காவலர் கண்மணி அடங்கிய பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த பரளியை சேர்ந்த கெளரிராஜன் என்பவரின் காரை சோதனை செய்த போது உரிய ஆவணங்கள் இன்றி 2 இலட்சத்து 37 ஆயிரத்து 440 ரூபாய் பணத்தை எடுத்து சென்றது தெரிய வந்தது.

இதனையடுத்து பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் நாமக்கல் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான கோட்டை குமாரிடம் ஒப்படைத்தனர். பணத்தை பெற்று கொண்ட அலுவலர் அதனை மாவட்ட கருவூலத்தில் செலுத்தினார். இது குறித்து அவர் கூறும்போது உரிய ஆவணங்களை வழங்கி அந்த பணத்தை பெற்று கொள்ளலாம் என தெரிவித்தார்.

Updated On: 1 March 2021 8:27 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!