Begin typing your search above and press return to search.
குமாரபாளையத்தில் பூச்சி மருந்து சாப்பிட்டு இளம் பெண் தற்கொலை
குமாரபாளையத்தில், பூச்சி மருந்து சாப்பிட்டு இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார்.
HIGHLIGHTS
குமாரபாளையம் சத்யாபுரி பகுதியில் வசிப்பவர் திவ்யபாரதி, 19. வயிற்றுவலி காரணமாக அவதிப்பட்டு வந்த இவர், நேற்று முன்தினம் மாலை 5:00 மணியளவில், பூச்சி மருந்து குடித்து விட்டதாக தெரிகிறது.
இதையடுத்து, சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனில்லாமல் நேற்று காலை 06:15 மணிக்கு திவ்யபாரதி இறந்தார். இது குறித்து, குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.