/* */

பள்ளிபாளையம்: தமிழ் புலிகள் கட்சி, திராவிட விடுதலை கழகம் ஆர்ப்பாட்டம்

பள்ளிபாளையம் ஐந்து பனை பகுதி தொழிலாளியை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

பள்ளிபாளையம்: தமிழ் புலிகள் கட்சி, திராவிட விடுதலை கழகம் ஆர்ப்பாட்டம்
X

பள்ளிபாளையம் பேருந்து நிறுத்த பகுதியில் ஆர்ப்பாட்டம் நடை பெறுவதை படத்தில் காணலாம்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்த ஐந்துபனை பகுதியில், இரண்டு தினங்களுக்கு முன்பாக சக்தி என்ற கூலித் தொழிலாளியை, சாதியை குறிப்பிட்டு தாக்குதல் நடத்தியதாக பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர். "

இந்நிலையில், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும், தலித் சமூகத்திற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும், தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் தலித் மக்கள், தலித் தலைவர்கள், மீது தாக்குதல் நடத்துவதை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பேருந்து நிறுத்த பகுதியில் தமிழ் புலிகள் கட்சி, மற்றும் திராவிட விடுதலை கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ் புலிகள் கட்சி ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். திராவிட விடுதலைக் கழகம் மாவட்ட அமைப்பாளர் முத்துப்பாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Updated On: 21 July 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’