Begin typing your search above and press return to search.
குமாரபாளையத்தில் கொரோனா விதிகளை மீறி அலட்சியம் காட்டும் பத்திரப்பதிவு அலுவலர்கள்
குமாரபாளையம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் அதிகாரிகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மீறி கூட்டம் சேர்த்து அலட்சியப்படுத்தி வருகிறார்கள்.
HIGHLIGHTS
அனைத்து வணிக நிறுவனத்தார் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என நகராட்சி அலுவலர்கள், போலீசார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை செய்து வருகிறார்கள். இதற்காக அபராதமும் விதித்து வருகிறார்கள்.
ஆனால் குமாரபாளையம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எதுவும் பின்பற்றப்படுவதில்லை. அதிகளவில் கூட்டத்தை சேர்த்து வைத்துக்கொண்டு சமூக இடைவெளி பின்பற்றப்படுவதில்லை.
எல்லோருக்கும் முன் மாதிரியாக இருக்க வேண்டிய அரசு அலுவலக அலுவலர்கள் இவ்வாறு அலட்சியமாக இருப்பது கண்டு பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
எனவே அபராதம் விதிக்கும் அலுவலர்கள், அனைத்து அரசு அலுவலகங்களிலும் திடீர் ஆய்வு மேற்கொண்டு விதி மீறும் அலுவலர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.