Begin typing your search above and press return to search.
பள்ளிபாளையத்தில் ஜன. 3ம் தேதி மின்சாரம் நிறுத்தம்
மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக, பள்ளிபாளையத்தில் ஜன. 3ல் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
HIGHLIGHTS
இதுகுறித்து செயற்பொறியாளர் வாசுதேவன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: பள்ளிபாளையம் துணை மின் நிலையத்தில் ஜன. 3ல் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
பள்ளிபாளையம், வெடியரசம்பாளையம், வரப்பாளையம், வெள்ளிக்குட்டை, ஆவாரங்காடு, அலமேடு, புதுப்பாளையம், ஆலாம்பாளையம், எஸ்.பி.பி. காலனி, அண்ணா நகர், தாஜ்நகர், ஆயக்காட்டூர், காவேரி ஆர்.எஸ்., ஒடப்பள்ளி, பாப்பம்பாளையம், கொக்காராயன்பேட்டை, பட்லூர், இறையமங்கலம், உள்ளிட்ட பகுதிகளுக்கு காலை 09:00 முதல், 04:00 வரை மின் வினியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.