/* */

மாநில அளவில் தமிழ் பாடத்தில் சதம்: குமாரபாளையம் பள்ளி மாணவன் சாதனை

மாநில அளவில் தமிழ் பாடத்தில் சதம் அடித்து குமாரபாளையம் ரிலையன்ஸ் பள்ளி மாணவன் சாதனை செய்துள்ளார்.

HIGHLIGHTS

மாநில அளவில் தமிழ் பாடத்தில் சதம்: குமாரபாளையம் பள்ளி மாணவன் சாதனை
X

மாநில அளவில் தமிழ் பாடத்தில் சதம் அடித்து குமாரபாளையம் ரிலையன்ஸ் பள்ளி மாணவன் ஸ்ரீராம் சாதனை செய்துள்ளார்.

மாநில அளவில் தமிழ் பாடத்தில் சதம் அடித்து குமாரபாளையம் ரிலையன்ஸ் பள்ளி மாணவன் சாதனை செய்துள்ளார்.

குமாரபாளையம் ரிலையன்ஸ் பள்ளியில் படித்து வருபவர் ஸ்ரீராம். இவர் 12ம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். இவர் பெற்ற மதிப்பெண்கள் விவரம் : தமிழ் 100, ஆங்கிலம் 96, கணிதம் 92, இயற்பியல் 97, வேதியியல் 98, தாவரவியல் 100 . மொத்த மதிப்பெண்கள் 583. இதே பள்ளியில் 12ம் வகுப்பு தேர்வில் 230 பேர் தேர்வு எழுதினர். இவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மோனிஷா 593, சந்தோஷ் 588, கிருஷ்ணசாமி 587 முதல், இரண்டாம், மூன்றாம் இடங்கள் பிடித்துள்ளனர். 580க்கு மேல் 11, 570 க்கு மேல் 18, 550க்கு மேல் 36, 500க்கு மேல் 80 பேர் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தமிழ் 1, இயற்பியல் 2,வேதியியல் 4, கம்.சயின்ஸ் 6, தாவரவியல் 1, கணிதம் 1, அக்கவுண்டன்சி 3, கம்ப்யூட்டர் அப்ளிகேசன் 3 பிசினெஸ் கணிதம் 1 ஆகிய பாடப்பிரிவுகளில் 100 சதம் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

10ம் வகுப்பு தேர்வில் 104 பேர் தேர்வு எழுதியதில் 103 பேர் தேர்வாகியுள்ளனர். பரணி 491, தர்ஷினி 487, ஹேமாவதி 487, ஹயக்கிரீவா 487, தனுஸ்ரீ 482 மதிப்பெண்கள் பெற்று முதல், இரண்டாம், மூன்றாம் இடங்கள் பிடித்துள்ளனர். கணிதம் 4, அறிவியல் 8 பேர் 100 சதம் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். சாதனை படைத்த மாணவ, மாணவியர்களை பள்ளியின் தாளாளர் ராமசாமி, செயலர் கோமதி வெங்கடாசலம், பொருளர் கந்தசாமி, முதல்வர் பிரின்சி மெர்லின் உள்ளிட்ட நிர்வாகிகள், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவியர்கள் பாராட்டினர்.

Updated On: 20 Jun 2022 1:15 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்