Begin typing your search above and press return to search.
மது போதையில் தூக்கு மாட்டி ஒருவர் பலி
குமாரபாளையம் அருகே கூலித் தொழிலாளி மது போதையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
HIGHLIGHTS
குமாரபாளையம் அருகே கத்தேரி பகுதியில் வசிப்பவர் துரைசாமி, 38, கூலித்தொழிலாளி. இவர் வீட்டில் யாரும் இல்லாத போது நேற்று முன் தினம் இரவு 10:30 மணிக்கு மது போதையில் தூக்கு மாட்டிக்கொண்டதாக கூறப்படுகிறது. இவரை சிகிச்சைக்காக குமாரபாளையம் ஜி.ஹெச்.க்கு கொண்டு வந்த போது, ஏற்கனவே உயிரிழந்ததாக இவரை பரிசோதித்த டாக்டர் கூறினார். இது குறித்து தேவூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.