/* */

இறைச்சி கடைகள் மூடல் - கோழி பிடிக்க கிராமங்களுக்கு படையெடுக்கும் மக்கள்!

இறைச்சி கடைகள் மூடப்பட்டுள்ளதால், அசைவப் பிரியர்கள் இறைச்சிக்காக கிராமப்புறங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

HIGHLIGHTS

இறைச்சி கடைகள் மூடல் - கோழி பிடிக்க கிராமங்களுக்கு படையெடுக்கும் மக்கள்!
X

இறைச்சிக்கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில், கிராமங்களுக்கு சென்று கோழி வாங்கும் மக்கள்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழக அரசு முழு ஊரடங்கு அறிவித்துள்ளது அதன் ஒரு பகுதியாக, நாமக்கல் மாவட்டம் முழுவதும் அனைத்து நாட்களிலும் ஆடு, கோழி உள்ளிட்ட இறைச்சி கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், அசைவப் பிரியர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் உள்ள பல அசைவப் பிரியர்கள், இதற்கு தீர்வாக, அருகிலுள்ள கிராமப்புறங்களுக்கு படையெடுத்து வருகின்றனர் அங்கு விவசாயத் தோட்டங்களில் வளர்க்கபப்டும் இறைச்சிக் கோழிகளை நேரடியாக வாங்கி, சுத்தம் செய்து வாங்கிச் செல்கின்றனர்.

இதுகுறித்து, இறைச்சி வாங்கிய சிலர் கூறுகையில், ஊரடங்கு என்பதால் இறைச்சிக்கடைகள் இயங்குவதில்லை அப்படி மீறி திறந்தாலும், கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்து விடுகின்றனர். அதனால் கடைகளில் யாரும் கோழிகள் வாங்கி வைப்பதில்லை.

எனவே, நாங்கள் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள கிராமப்புறங்களில், விவசாயக்காட்டில் வளர்க்கப்படும் கோழிகளின் நேரடியாக வாங்குகிறோம். இதனால் விலை குறைவாக கோழிகள் கிடைப்பதுடன், நல்ல ருசியானதாக இருக்கின்றன. கடைகள் திறக்கும் வரை கிராமப்புறங்களில் வளரும் கோழிகளை வாங்குவோம் என்றனர்.

Updated On: 31 May 2021 1:33 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  3. லைஃப்ஸ்டைல்
    ஸ்ரீ கிருஷ்ணரின் ஞான வார்த்தைகள் !
  4. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  6. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  7. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    50 சிறந்த மகளிர் தின வாழ்த்துச் செய்திகள்!
  9. ஈரோடு
    அந்தியூர் பகுதியில் பரவலாக மழை: சேற்றில் சிக்கிய அரசு பேருந்து
  10. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை