/* */

குமாரபாளையம் நகராட்சி கழிவறையில் ஆண் சடலம், கொலையா, போலீஸ் விசாரணை

குமாரபாளையத்தில் நகராட்சி கழிவறையில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இது கொலையா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

HIGHLIGHTS

குமாரபாளையம் நகராட்சி கழிவறையில்  ஆண் சடலம், கொலையா, போலீஸ் விசாரணை
X

குமாரபாளையம் காவல் நிலையம் பைல் படம்

குமாரபாளையம் கம்பன் நகரில் நகராட்சி பொதுக்கழிப்பிடம் உள்ளது. இரவு 10:45 மணியளவில் அபப்குதியை சேர்ந்த ஒருவர் கழிப்பிடம் சென்ற போது, அருகில் இருந்த கழிவறையில் துர்நாற்றம் வீசுவதாக கூறியுள்ளார்.

இது பற்றி குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது, நேரில் சென்ற போலீசார் அழுகிய நிலையில் ஆண் சடலத்தை மீட்டனர். இறந்தவர் பெயர், விபரம் தெரியவில்லை. கழிப்பிடம் வந்த இடத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்ததாக கூறப்படுகிறது.

இது நடந்து பழ நாட்கள் ஆனதால் துர்நாற்றம் வீசியுள்ளது. பொதுக்கழிப்பிடம் பராமரிப்பவர்கள் தினமும் தண்ணீர் ஊற்றி தூய்மை செய்வதில்லை. தினமும் தண்ணீர் ஊற்றி தூய்மை செய்திருந்தால் ஒரே நாளில் இந்த இறப்பு குறித்து தகவல் கிடைத்திருக்கும்.

இது குறித்து குமாரபாளையம் போலீசார் எப்படி இறந்தார், ஏன் இறந்தார், ஏன் அந்த அறை சுத்தம் செய்யவில்லை, என பல்வேறு கோணத்தில் விசாரணை செய்து வருகிறனர்.

Updated On: 29 Aug 2021 5:45 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்