/* */

சிறப்பு உறுப்பினர் அட்டை வழங்கிய மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள்

பள்ளிபாளையத்தில் மக்கள் நீதி மய்யத்தாரின் சிறப்பு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

HIGHLIGHTS

சிறப்பு உறுப்பினர் அட்டை வழங்கிய  மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள்
X

பள்ளிபாளையத்தில் மக்கள் நீதி மய்யத்தாரின் சிறப்பு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

பள்ளிபாளையம் மக்கள் நீதி மய்யம் சார்பில், மாவட்ட செயலர் காமராஜ் வழிகாட்டுதல் பேரில், மாவட்ட துணை செயலர் மகுடேஸ்வரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நகர செயலர் விக்னேஷ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

நகரில் உள்ள சேதமான சாலைகள், எரியாத மின் விளக்குகள், பழுதான குடிநீர் குழாய்கள், புதிதாக கட்ட வேண்டிய வடிகால்கள் உள்ளிட்ட விபரங்களை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் மனுவாக கொடுத்து நடவடிக்கை எடுக்க கோருதல், புதிய உறுப்பினர்களை சேர்த்தல், பொதுமக்களுக்கு மிகவும் அத்தியாவசியமான வருமான வரி சான்று, இருப்பிட சான்று, வாரிசு சான்று, முதியோர் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை விண்ணப்பம் உள்ளிட்ட பல ஆவணங்கள் கிடைத்திட வழிகாட்டுதல் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் சிறப்பு உறுப்பினர்களுக்கான அடையாள அட்டையை ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் மல்லிகா வழங்கினார். நிர்வாகிகள், உறுப்பினர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.

Updated On: 9 May 2022 4:00 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!