/* */

'மவுசு' போன பழைய மாடல் விசைத்தறி : பழைய இரும்புக்கடைக்கு பயணமாகும் சோகம்

ஜவுளி நூல் விலை உயர்வு மற்றும் நவீன விசைத்தறிகள் வருகையால் பழைய மாடல் தறிகள் பழைய இரும்பு கடைக்கு எடைக்கு விற்கப்பட்டு வருகின்றன.

HIGHLIGHTS

மவுசு போன பழைய மாடல் விசைத்தறி : பழைய இரும்புக்கடைக்கு பயணமாகும் சோகம்
X

பள்ளிபாளையம் பாலம் சாலையில் செயல்பட்டு வரும் பழைய இரும்பு கடையில் பழைய மாடல் விசைத்தறி உதிரிபாகங்கள் இருப்பதை படத்தில் காணலாம்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் செயல்படும் பழைய இரும்புக் கடைகளுக்கு பழைய மாடல் விசைத்தறிகள் அதிகளவில் எடைக்கு போடப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து விசைத்தறி தொழில் நடத்தும் உரிமையாளர் ஒருவர் "இன்ஸ்டாநியூஸ்"இணையதள செய்தி நிறுவன செய்தியாளரிடம் கூறிய போது:-

கடந்த சில வருடங்களாகவே விசைத்தறி தொழில்கள் மிகுந்த. சிரமைத்தை சந்தித்து வருகிறது. இந்த நிலையில்,சந்தையில் விசைத்தறி ஜவுளி நூல்கள் தொடர் விலை ஏற்றம், ஊரடங்கு விசைத்தறிகள் முடக்கம், விசைத்தறிகள் இயக்குவதற்கு தொழிலாளர்கள் பற்றாக்குறை, அதிநவீன விசைத்தறிகள் உருவாக்கம்,உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நாங்கள் பயன்படுத்தி வந்த பழைய மாடல் விசைத்தறிகளுக்கு மவுசு இல்லாமல் போய்விட்டது.

அதனால் இந்த பழைய மாடல் விசைத்தறி வைத்துள்ள உரிமையாளர்கள் விற்பனை செய்வதற்கும் வழியில்லை. யாரும் வாங்க முன்வரமாட்டார்கள். அதைக் காட்டிலும், எடைக்குப் போடுவதால் கணிசமான தொகை கிடைக்கிறது. அதனால் ஏராளமான விசைத்தறி உரிமையாளர்கள் தங்களுடைய பழைய மாடல் தறிகளை எடைக்குப் போட்டு வருவதாக தெரிவித்தார்.

Updated On: 11 July 2021 1:52 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  3. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  4. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆணவம்: வாழ்வை சிதைக்கும் நஞ்சு
  6. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  7. வீடியோ
    🔴LIVE: கர்நாடகாவில் அண்ணாமலை அனல் பறக்கும் பேச்சு! | தொண்டர்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    நீதியின் பக்கம் நில்லுங்கள்..! நீதி கிடைக்கும்..!
  9. வீடியோ
    ஆன்மிகம் கை கொடுக்கும்!படத்தை பார்த்தா என்ன கிடைக்கும்?...
  10. ஈரோடு
    ஈரோட்டில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை, பிரார்த்தனை