/* */

குமாரபாளையம் தாலுக்கா காவல் நிலைய, தனிப்பிரிவு காவலர்கள் பணி இடமாற்றம்

குமாரபாளையம் தாலுக்கா காவல் நிலைய, தனிப்பிரிவு காவலர்கள் உள்பட, நாமக்கல் மாவட்டத்தில் 26 எஸ்பி தனிப்பிரிவு காவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

HIGHLIGHTS

குமாரபாளையம் தாலுக்கா காவல் நிலைய, தனிப்பிரிவு காவலர்கள் பணி இடமாற்றம்
X

நாமக்கல் மாவட்டத்தில் எஸ்பி தனிப்பிரிவு காவலர்களின் இடமாற்றம் பற்றிய விபரம்.

நாமக்கல் மாவட்டத்தில் பணியாற்றி 26 எஸ்.பி. தனிப்பிரிவு காவலர்களுக்கான இடமாறுதல் உத்தரவினை நாமக்கல் மாவட்ட எஸ்பி சரோஜ்குமார் தாகூர் பிறப்பித்தார். அதனடிப்படையில், குமாரபாளையம் தாலுக்கா காவல் நிலைய தனிப்பிரிவு காவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அவ்வகையில், குமாரபாளையம் தாலுக்கா, குமராபாளையம் காவல்நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக செயல்பட்டு வந்த கார்த்திகேயன், பள்ளிபாளையம் காவல் நிலையத்திற்கும்; பள்ளிபாளையம் காவல்நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக பணிபுரிந்து வந்த கே.கோபாலகிருஷ்ணன், மொளசிக்கும்; வெப்படை புறக்காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த முகிலன், வி.ஜி. பட்டிக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

அதேபோல், வெப்படையில் பணியாற்றிய கிருஷ்ண மூர்த்தி, குமாரபாளையம் காவல்நிலைய தனிப்பிரிவு காவலராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இடம் மாறுதல் செய்யப்பட்ட அனைத்து எஸ்பி தனிப்பிரிவு காவலர்களும், நாளை திங்கட்கிழமை பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என நாமக்கல் மாவட்ட எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.

Updated On: 4 July 2021 1:45 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்