/* */

குமாரபாளையம் நகராட்சி வரி மேல்முறையீட்டுக்குழு உறுப்பினர் ஒரே நாளில் ராஜினாமா

குமாரபாளையம் நகராட்சி வரி மேல்முறையீட்டுகுழு உறுப்பினர் ஒரே நாளில் ராஜினாமா செய்தார்.

HIGHLIGHTS

குமாரபாளையம் நகராட்சி வரி மேல்முறையீட்டுக்குழு உறுப்பினர் ஒரே நாளில் ராஜினாமா
X

குமாரபாளையம் தி.மு.க. கவுன்சிலர் ராஜு வரி மேல்முறையீட்டுகுழுவில் இருந்து விலகுவதற்கான தனது ராஜினாமா கடிதத்தை நகராட்சி கமிஷனர் சசிகலாவிடம் வழங்கினார். 

குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் நியமன குழு, ஒப்பந்த குழு, வரி மேல் முறையீட்டு குழுவிற்கான தேர்தல் சேர்மன் விஜய்கண்ணன் தலைமையில் நடைபெற்றது.

இதில் நியமனக்குழு பொறுப்பாளராக அழகேசன், ஒப்பந்தக்குழு பொறுப்பாளராக வேல்முருகன், வரி மேல்முறையீட்டுக்குழு பொறுப்பாளர்களாக ரேவதி, ராஜு, கோவிந்தராஜ், கனகலட்சுமி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர். இதில் அதிருப்தியடைந்த தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இந்நிலையில் வரி மேல்முறையீட்டுக் குழுவில் நியமனம் செய்யப்பட்ட தி.மு.க. கவுன்சிலர் ராஜு ராஜினாமா செய்தார். நகராட்சி கவுன்சிலர்கள் தி.மு.க. கட்சியால் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சத்தியசீலன் தலைமையிலான அணியினர், சேர்மன் விஜய்கண்ணன் தலைமையிலான அணியினர் என இரு அணிகளாக இருந்து வருகின்றனர்.

வரி மேல்முறையீட்டுக்குழுவில் எதிர்தரப்பை சேர்ந்த தி.மு.க. கவுன்சிலர் ராஜுவுக்கு, சேர்மன் தரப்பினர் வாய்ப்பு வழங்கியும், எதிர் தரப்பினர் எதிர்ப்பால் ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது. அந்த இடத்திற்கு யாரை நியமிப்பது என்பது குறித்து சேர்மன் தரப்பினர் ஆலோசனை செய்து வருகின்றனர். கவுன்சிலர் ராஜு தனது ராஜினாமா கடிதத்தை நகராட்சி கமிஷனர் சசிகலாவிடம் வழங்கினார். கவுன்சிலர்கள் சத்தியசீலன், ரங்கநாதன், நிர்வாகி ரவி உள்பட பலர் உடனிருந்தனர்.

Updated On: 1 April 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!