/* */

குமாரபாளையம் காவிரியில் புதிய பாலம் அமைக்க கோரிக்கை

குமாரபாளையம் காவிரியில்  புதிய பாலம் அமைக்க கோரிக்கை
X

குமாரபாளையம் பாலம் (மாதிரி படம்)

குமாரபாளையத்தில், புதிய பலம் அமைக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

குமாரபாளையத்தில் பழைய காவிரி பாலத்தை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. ஆனால், புதிய பாலம் அமைக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

காவிரி ஆற்றின் குறுக்கே ஏற்கனவே 4 பாலங்கள் இருக்கின்றன. இதில் நகராட்சி அருகே இருக்கும் பலம் மிகவும் பழசானதாகும். மேலும் மிக மோசமாகவும் உள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேல் இந்த பாலத்தின் வழியாக கன ரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. டூவீலர், கார்கள் மட்டுமே சென்று வருகின்றன. இருப்பினும் அந்த பாலம் நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது.

பாலம் மோசமாகும்போது பராமரிப்பு பணி மட்டும் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக இந்த பாலத்தில் பராமரிப்பு பணிகள், நடந்து வருகிறது. இந்த பாலம் குமாரபாளையம், பவானியை இணைக்கும் மிக முக்கியமான பாலம் ஆகும். ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் குமாரபாளையத்துக்கு வேலைக்கு வருவதற்கு இந்த பாலம் மட்டுமே உள்ளது. பாலம் பழுதானால் பல கிலோமீட்டர் சுற்றித்தான் குமாரபாளையத்திற்கு வரவேண்டும்.

அதனால், புதிய பாலம் ஒன்று கட்டினால் மட்டுமே போக்குவரத்துக்கு வசதியாக இருக்கும் என்று இப்பகுதி சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இப்பகுதியில் கைத்தறி, விசைத்தறி தொழில்கள் நடப்பதால் புதிய பாலம் காட்டினால் தொழில் வளர்ச்சி அடைய உதவும்.



Updated On: 14 April 2021 8:10 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’