/* */

குமாரபாளையம் புறவழிச்சாலையில் பயணிகளை அலறவிட்ட அரசு பஸ்கள்

சேலத்தில் இருந்து வந்த இரு அரசு பேருந்துகள் குமாரபாளையம் புறவழிச்சாலையில் வேகமாக ஒன்றோடு ஒன்று முந்திச்சென்று பயணிகளை அலறவிட்டனர்.

HIGHLIGHTS

குமாரபாளையம் புறவழிச்சாலையில் பயணிகளை அலறவிட்ட அரசு பஸ்கள்
X

ஒன்றோடு ஒன்று உரசும் வகயைில் முந்திச் செல்லும் பேருந்து.

சேலத்தில் இருந்து குமாரபாளையம் புறவழிச்சாலையில் வந்த இரு அரசு பஸ்கள் வேகமாக வந்து பயணிகளை அலறவிட்டனர்.

நேற்று சேலம் - கோவை புறவழிச்சாலையில் சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் இருந்து திருப்பூர் மற்றும் கோவை செல்லும் இரு அரசு பஸ்கள் நேற்று காலை 10:00 மணியளவில் புறப்பட்டன. இவைகள் புறப்பட்ட இடத்தில் இருந்தே வேகமாக சென்று ஒருவரை ஒருவர் முந்தி சென்று கொண்டிருந்தனர்.

குமாரபாளையம் அருகே வரும்போது சுமார் 10 கி.மீ. தூரத்திற்கு இரு பஸ்களும் ஒன்றோடு ஒன்று உரசுவது போல் வந்தனர். இதனால் பயணிகள் இரு பஸ்களிலும் அலறினர். வழக்கமாக தனியார் பஸ்கள்தான் இது போன்ற ஆபத்தான செயலில் ஈடுபடுவார்.

ஆனால் அரசு பஸ்களே இப்படி செய்தது அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. இதுபோன்று பயணிகளின் உயிரோடு விளையாடும் ஓட்டுநர்கள் மீது போக்குவரத்து நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 21 March 2022 4:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மீன ராசிக்கு எப்படி இருக்கும்?
  4. தொழில்நுட்பம்
    ககன்யான் திட்டத்தின் அடுத்த கட்டம்: பாராசூட் சோதனையில் இஸ்ரோ!
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: துலாம் ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. உலகம்
    கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்கவிளைவுகளா? அஸ்ட்ராஜெனகா விளக்கம்
  7. லைஃப்ஸ்டைல்
    வெயிலை விரட்டுங்கள்: இந்தியாவின் கோடைக்கால பழங்கள்!
  8. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டு சிறை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
  9. தமிழ்நாடு
    சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங் கட்டணம் உயர்வு
  10. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கன்னி ராசிக்கு எப்படி இருக்கும்?