/* */

பள்ளிபாளையத்தில் தடையை மீறி விநாயகர் சிலை: போலீசார் தடுத்து நிறுத்தம்

பள்ளிபாளையத்தில் தடையை மீறி விநாயகர் சிலையை வைக்க முயற்சித்த விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

HIGHLIGHTS

பள்ளிபாளையத்தில் தடையை மீறி விநாயகர் சிலை: போலீசார் தடுத்து நிறுத்தம்
X

பள்ளிபாளையம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் விஸ்வஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் தடையை மீறி வைக்கப்பட்ட விநாயகர் சிலை.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலை வைத்து வழிபட அரசு தடை விதித்துள்ளது. மேலும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச்செல்வதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதனைக் கண்டிக்கும் வகையில் விஸ்வஹிந்து பரிஷத் அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் பள்ளிபாளையம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் சிலை வைத்து வழிபட முயற்சி செய்தனர். அப்போது வருவாய்த்துறையினர், இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி அரசு உத்திரவை எடுத்து கூறினர்.

ஆனாலும் இந்து மதம் சார்ந்த திருவிழாக்கள் கொண்டாட தமிழக அரசு தடை விதித்து வருகிறது என அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பேச்சுவார்த்தை முடிவில் அந்த அமைப்பினர் சிலைகளை எடுத்துச் சென்றனர். முன்னதாக அரசின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Updated On: 10 Sep 2021 4:30 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  2. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  4. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  5. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  6. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  7. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  9. வீடியோ
    மிஷ்கின் படத்தில எல்லாமே violenceஅது societyக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’