/* */

குமாரபாளையம் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு கிரீடம் அணிவித்து உற்சாக வரவேற்பு

குமாரபாளையம் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு கிரீடம் அணிவித்து ஆசிரியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

HIGHLIGHTS

குமாரபாளையம் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு கிரீடம் அணிவித்து உற்சாக வரவேற்பு
X

குமாரபாளையம் மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு நேசமுடன் உற்சாக வரவேற்பு அளித்த வட்டார கல்வி அலுவலர் மேகலாதேவி மற்றும் ஆசிரியர்கள்.

கடந்த 600 நாட்களுக்கு பின்பு பள்ளிகள் திறக்கவும், மாணவர்களை உற்சாகமாக வரவேற்கவும் தமிழக அரசு உத்திரவிட்டது. அ

தன்படி குமாரபாளையம் மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் பள்ளியின் முன்பு வாழை மரங்கள் தோரணங்கள் கட்டப்பட்டும், வழிநெடுக விரிப்புகள் விரிக்கப்பட்டும், பள்ளி வளாகம் முழுவதும் வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

வட்டார கல்வி அலுவலர் மேகலாதேவி, பள்ளி தலைமை ஆசிரியை கவுசல்யாமணி தலைமை வகிக்க முதலாம் வகுப்பு பயில வரும் மாணவ, மாணவியர்க்கு மாலைகள் மற்றும் கிரீடம் அணிவிக்கப்பட்டு நேசமுடன் வரவேற்பு வழங்கப்பட்டது.

அனைத்து மாணவ, மாணவியருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. வரவேற்பு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் ரவி, வெங்கடாசலம், விஜயகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

Updated On: 1 Nov 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!