/* */

குடியிருப்புப் பகுதியில் மதுபான கடை வேண்டாம்

- ஊர் இளைஞர்கள் கையெழுத்து இயக்கம்.

HIGHLIGHTS

குடியிருப்புப் பகுதியில் மதுபான கடை வேண்டாம்
X

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 15 வது வார்டு பெரியார் நகர் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன இதில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளிபாளையம் பெரியார் நகர் ஆற்றங்கரையோரம் உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் புதியதாக அரசு மதுபான கடை வர உள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி அதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதாகவும், இதனை அறிந்த அப்பகுதி இளைஞர்கள் ஊர் பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர். ஏற்கனவே பெரியார் நகர் பகுதியில் சந்து மதுக்கடைகளால் பெண்களுக்கு ஆபத்து உள்ள சூழலில் புதிதாக அரசு மதுபான கடை திறக்கப்பட உள்ளதாக தகவல்கள் வருகின்றன.

எனவே பெண்கள் குழந்தைகள் பொதுமக்கள் அதிகம் உள்ள இந்த பகுதியில் மதுபான கடை திறந்தால் சமூக விரோத செயல்கள் நடைபெறும் எனவும், எனவே இந்த மதுபான கடை வரக் கூடாது என அதில் குறிப்பிடப்பட்டது. இதனடிப்படையில் கையெழுத்து இயக்கம் இன்று பெரியார் நகர் பகுதி முழுவதும் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளிக்க திட்டமிட்டுள்ளதாக அப்பகுதி இளைஞர்கள் நம்மிடையே தெரிவித்தனர்.

Updated On: 17 May 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...