/* */

குமாரபாளையத்தில் சிபிஎம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி குமாரபாளையத்தில் சிபிஎம் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் சிபிஎம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
X

சி.பி.எம். சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் கேஸ் விலை உயர்வை கைவிட வேண்டும், மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை உடனே நிறுத்த வேண்டும், குறைந்தபட்ச ஊதிய திட்டத்தை முறைப்படுத்த வேண்டும், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்க, தேசிய சமூக பாதுகாப்பு நிதியம் உருவாக்கப்பட வேண்டும், வேலைவாய்ப்பை அதிகரித்து வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க வேண்டும், என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகள் வலியுறுத்தி சி.பி.எம். சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆனங்கூர் பிரிவு சாலையில் நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு நகரக்குழு உறுப்பினர் சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் முருகேசன், நகர செயலர் சக்திவேல், நகர முன்னாள் செயலர்கள் பாலுசாமி, ஆறுமுகம், நிர்வாகிகள் சண்முகம், கந்தசாமி, காளியப்பன், பெருமாயி, மாதேஸ் உள்பட பலர் பங்கேற்றனர். கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் முழங்கினர். கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

Updated On: 5 April 2022 4:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’