/* */

குமாரபாளையத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி சி.பி.எம் கண்டன ஆர்ப்பாட்டம்

குமாரபாளையத்தில் சி.பி.எம். வடக்கு ஒன்றியம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி சி.பி.எம் கண்டன ஆர்ப்பாட்டம்
X

குமாரபாளையத்தில் சி.பி.எம். வடக்கு ஒன்றியம் சார்பில் கோட்டைமேடு பிரிவு சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குமாரபாளையத்தில் சி.பி.எம். வடக்கு ஒன்றியம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஒன்றிய அரசின் இந்தி திணிப்புக்கு எதிராகவும், மத்திய பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தேர்வு ரத்து செய்யக்கோரியும், சி.பி.எம். வடக்கு ஒன்றியம் சார்பில் கோட்டைமேடு பிரிவு சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிர்வாகி ராஜா தலைமை வகித்தார். கோரிக்கைகள் வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. கோரிக்கைகள் குறித்த பதாதைகளை ஏந்தியவாறும், கட்சி கொடிகளை ஏந்தியவாறும் நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர். ஒன்றிய செயலர் சந்திரமதி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சேகர், தனேந்திரன், மணிகண்டன், சண்முகம் உள்பட பலர் பங்கேற்றனர்.

Updated On: 20 April 2022 12:22 AM GMT

Related News