Begin typing your search above and press return to search.
பள்ளிப்பாளையத்தில் மீண்டும் அதிகரித்த கொரோனா பாதிப்பு
பள்ளிப்பாளையத்தில் சில நாட்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்திருந்த நிலையில், இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில், கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு சற்று குறைந்திருந்தது. இன்று வெளியிடப்பட்ட அரசின் செய்திக்குறிப்பின்படி, பள்ளிப்பாளையத்தில், 4-பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
பள்ளிபாளையம் பகுதியில் இதுவரையிலும் 207- பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது 14-பேர் தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில் 131-பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 65- நபர்கள் சிகிச்சையில் உள்ளனர்.
கடந்த சில நாட்களாக பள்ளிப்பாளையம் பகுதியில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில் தற்போது அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.