/* */

ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை காணொளி மூலம் தொடங்கி வைத்த முதல்வர்

குமாரபாளையத்தில் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை காணொளி மூலம் முதல்வர் தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை  காணொளி மூலம் தொடங்கி வைத்த முதல்வர்
X

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் தொடங்கி வைத்தார்.

வேளாண்மை, உழவர் நலத்துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி தொடங்கி வைக்கும் விழா குமாரபாளையத்தில் நடைபெற்றது.

குமாரபாளையம் பகுதி தட்டான்குட்டை ஊராட்சி சமுதாய கூடத்தில் நடைபெற்ற விழாவில், ஊராட்சிமன்றத் தலைவர் புஷ்பா தலைமை தாங்கினார். இதில் துணை வேளாண்மை அலுவலர் குப்பண்ணன் பங்கேற்று திட்டம் குறித்து விவசாயிகளிடம் விளக்கி கூறினார்.

அப்போது, இந்த திட்டம் 5 ஆண்டுகளில் மாநிலத்தில் உள்ள 12 ஆயிரத்து 524 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட உள்ளது. 2022, 2023ம் ஆண்டில் இத்திட்டம் 3 ஆயிரத்து 204 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட உள்ளது என பேசினார்.

உதவி வேளாண்மை அலுவலர்கள் காமேஷ், சரவணன், உதவி தோட்டக்கலை அலுவலர் சக்திவேல், உதவயு வேளாண்மை வணிக அலுவலர் பாலமுருகன், உதவி விதை அலுவலர் பிரகாஷ், உதவி தொழில் நுட்ப மேலாளர் பிரியங்கா உள்ளிட்ட விவசாயிகள் பெருமளவில் பங்கேற்றனர்.

Updated On: 23 May 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!