/* */

குமாரபாளையம் கோவில் விழாவில் பெண்களிடம் 10 பவுன் நகை பறிப்பு

குமாரபாளையத்தில், கோவில் கும்பாபிஷேக விழாவில் இரு பெண்களிடம் 10 பவுன் நகை பறித்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

HIGHLIGHTS

குமாரபாளையம் கோவில் விழாவில் பெண்களிடம் 10 பவுன் நகை பறிப்பு
X

குமாரபாளையம் ஜே.கே.கே. நடராஜா நகர், திருவள்ளுவர் நகர், வாசுகி நகரில் மங்களாம்பிகை உடனமர் மகேஸ்வரர், ஸ்ரீதேவி, பூதேவி சமேத சவுந்தர்ராஜ பெருமாள் ஆலயத்தில், ஸ்ரீபஞ்ச முக மகாவீர ஆஞ்சநேயர் திருக்கோவில் மகா கும்பாபிஷகம் நேற்று நடைபெற்றது. இதில் நகரில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்றனர்.

இவ்விழாவில், மர்ம நபர்கள், இரு பெண்களின் நகைகளை திருடி சென்றனர். இது பற்றி குமாரபாளையம் போலீசில், திருவள்ளுவர் நகரை சேர்ந்த பொன்னம்மாள், 58, வாசுகி நகரை சேர்ந்த காளியம்மாள், 61,புகார் அளித்தனர். கூலித்தொழிலாளி பொன்னம்மாளின் ஐந்தரை பவுன் தாலிக்கொடியும், ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியை காளியம்மாளின் ஐந்து பவுன் தங்க செயின் பறிபோனதும் தெரியவந்துள்ளது. குமாரபாளையம் போலீசார் சி.சி.டி.வி. கேமராவில் ஆய்வு செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 22 Dec 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  6. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  7. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  8. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  9. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!