/* */

குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் நாய்கள் தொல்லை : நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அரசு மருத்துவமனை வளாகம் பகுதிகளில், சாதாரணமாக தெருநாய்கள் சுற்றுவதால், நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க,சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் நாய்கள் தொல்லை  :  நடவடிக்கை எடுக்க கோரிக்கை
X

குமாரபாளையம் அரசு மருத்துவமனை வளாகப் பகுதியில், தெரு நாய்கள் சுற்றி திரிவதை படத்தில் காணலாம்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பவானி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனர்.

அதே நேரத்தில் கொரோனா தடுப்பு சிறப்பு சிகிச்சை பிரிவும், இந்த பகுதியில் செயல்பட்டு வருவதால் எப்பொழுதும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும். இந்நிலையில்,அரசு மருத்துவமனை வளாகம் பகுதிகளில் சாலைகளில் சுற்றித் திரியும் தெருநாய்கள் அதிக அளவில் உள்ளே சுற்றித் திரிகின்றன.

இங்கு சுற்றித் திரியும் தெருநாய்கள் பொதுமக்களை, நோயாளிகளை, அச்சுறுத்தும் வகையில் ஆட்களைக் கண்டால் குரைத்து , கூட்டமாக சேர்ந்து கொண்டு அங்குள்ள நோயாளிகளை மிரட்டி வருகின்றன. குமாரபாளையம் நகராட்சி நிர்வாகம் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுத்து,தெருநாய்களை முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும். குமாரபாளையம் அரசு மருத்துவமனை பாதுகாப்பு மிகுந்த பகுதியாக மாற்றப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

Updated On: 20 Jun 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்