அபெக்ஸ் கிளப் வாரவிழாவையொட்டி 60 மரக்கன்றுகள் நட்ட அபெக்ஸ் சங்கத்தார்
அபெக்ஸ் கிளப் வாரவிழாவையொட்டி குமாரபாளையத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
HIGHLIGHTS
குமாரபாளையம் :
குமாரபாளையம் அபெக்ஸ் சங்கம் சார்பில் 60 மரக்கன்றுகள் நடப்பட்டது.
அபெக்ஸ் கிளப் வார விழா ஆண்டு தோறும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அபெக்ஸ் கிளப் வார விழாவையொட்டி, வாகனங்களின் முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர் ஓட்டும் நிகழ்வு, கர்ப்பிணி தாய்மார்களுக்கு குழந்தைகள் கிட், ஜி.ஹெச். பயன்பாட்டிற்காக எமர்ஜென்சி லைட் வழங்குதல் ஆகிய பணிகள் நடைபெற்றன.
நேற்று எஸ்.எஸ்.எம். பள்ளி அருகே, குமாரபாளையம் நுழைவுப்பகுதியில் 60 மரக்கன்றுகள் நடப்பட்டன. சிறப்பு அழைப்பாளர்களாக இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ. மலர்விழி, முன்னாள் தேசிய தலைவர் இளங்கோ, குமாரபாளையம் ஜி.ஹெச். தலைமை டாக்டர் பாரதி, முன்னாள் தலைவர் புருஷோத்தமன், செயலர் கார்த்தி, எஸ்.எஸ்.எம். பாலிடெக்னிக் முதல்வர் பாலமுருகன், நிர்வாகிகள் சம்பத்குமார், மனோகர், சேவை இயக்குனர் சம்பத், வெங்கடேஷ், பிரபு, விஜய்பிரதாப், ப்ரீத்தி, சந்தானம், உள்பட பலர் பங்கேற்றனர்.