/* */

குமாரபாளையம் அருகே மின் கம்ப பீங்கான் உடைந்து விழுந்து மூதாட்டி காயம்

குமாரபாளையம் அருகே மின் கம்பத்தில் தீப்பிடித்து பீங்கான் உடைந்து மூதாட்டியின் தலை மேல் விழுந்ததில் மூதாட்டி காயம்.

HIGHLIGHTS

குமாரபாளையம் அருகே மின் கம்ப பீங்கான் உடைந்து விழுந்து மூதாட்டி காயம்
X

குமாரபாளையம் அருகே மின் கம்பத்தில் தீப்பிடித்து பீங்கான் உடைந்து மூதாட்டியின் தலை மேல் விழுந்ததில் மூதாட்டி ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, உப்புக்குளம், காட்டுவளவு பகுதியில் வசித்து வருபவர் கருப்பாயி, 70. இவரது பேத்தி யோகானந்தி, அதே பகுதியை சேர்ந்த சதீஸ்குமார் என்பவருக்கும் பிப். 7ல் திருமணம் நடைபெறவுள்ளது. இதற்கான திருமண பணிகளை கருப்பாயி கவனித்து வந்தார்.

நேற்று மாலை 06:00 மணியளவில் வீட்டின் அருகே உள்ள மின் கம்பத்தின் கீழே நின்று கொண்டிருக்க, திடீரென்று மின் கம்பத்தின் மின் கம்பிகள் தீப்பிடித்து, அதில் இருந்த பீங்கான் ஒன்று உடைந்து கருப்பாயி தலையில் விழுந்தது. இதனால் மயக்கமடைந்த இவரை, சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

Updated On: 5 Feb 2022 1:18 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!