மார்ச் 6ல் மது விலக்கு பிரிவு சார்பில் வாகனங்கள் ஏலம்
ஈரோட்டில் மார்ச் 6ல் மது விலக்கு பிரிவு சார்பில் வாகனங்கள் ஏலம் நடைபெறவுள்ளது.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்டு, தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் படி, பறிமுதல் செய்யப்பட்டுள்ள 15 நான்கு சக்கர வாகனம் மற்றும் 66 இரண்டு சக்கர வாகனங்கள், மொத்தம் 81 வாகனங்கள் மார்ச் 6ல் காலை 10:00 மணிக்கு ஈரோடு மாவட்டம், ஆனைக்கல்பாளையத்தில் அமைந்துள்ள ஆயுதப்படை மைதான வளாகத்தில் பொது ஏலம் நடைபெறவுள்ளது.
மார்ச் 5ல் காலை 10:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை நேரில் வாகனங்களை பார்வையிடலாம். வாகனங்களை ஏலம் எடுப்பவர்கள் இரு சக்கர வாகனத்திற்கு 2,000 ரூபாயும், நான்கு சக்கர வாகனத்திற்கு 5,000 ரூபாயும், மார்ச் 6ல் காலை 08:00 மணி முதல் 10:00 மணிக்குள் பொது ஏலம் நடத்தும் இடத்தில், முன் பணம் செலுத்த வேண்டும். முன் பணத்தொகை செலுத்துபவர் மட்டும் ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். வாகனத்தை ஏலம் எடுத்தவுடன் ஏலத்தொகை மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) முழுவதையும் செலுத்தி அப்போதே வாகனத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும் விபரங்களுக்கு காவல் துணை கண்காணிப்பாளர், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, ஈரோடு மாவட்டம், அவர்களின் அலுவலகத்தினை நேரடியாகவோ, தொலைபேசி மூலமோ தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண் : 9080550050, 9942402732, 9976057118.
--