/* */

மோகனூர் இளைஞர் கொலை வழக்கில் மூவர் கைது

மோகனூர் அருகே வாலிபரை கழுத்து அறுத்து கொலை செய்த மூன்று பேர் அதிரடி கைது.

HIGHLIGHTS

மோகனூர் இளைஞர் கொலை வழக்கில் மூவர் கைது
X

நாமக்கல் மாவட்டம் மோகனுார் அடுத்த ஒருவந்தூரை சேர்ந்த முருகேசன் மகன் சசிகுமார்(24). கடந்த, ஒன்றாம் தேதி புத்தாண்டு அன்று இரவு மோகனுார் ரயில்வே மேம்பாலத்தின் அருகே சசிகுமாரை பேசி வரவழைத்தனர். நண்பர்களான மலர்மன்னன், ரஞ்சித், பிரகாஷ் மூவரும் சேர்ந்து, பீர் பாட்டிலால் அடித்தும், கத்தியால் கழுத்தை அறுத்தும் சசிகுமாரை கொலை செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, மோகனுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர், தலைமறைவான மூன்று பேரையும் தேடி வந்தனர்.

இந்நிலையில், மோகனூர் போலீசார் வாங்கல் பாலத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த மலர்மன்னன், ரஞ்சித் மற்றும் பிரகாஷ் ஆகியோரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.தொடர்ந்து, அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட சசிக்குமார் மற்றும் கைது செய்யப்பட்ட மலர்மன்னன், ரஞ்சித்,பிரகாஷ் ஆகியோர் ஒன்றாக காவிரி ஆற்றில் திருட்டுத்தனமாக மணல் அள்ளி விற்பனை செய்து வந்துள்ளனர். இதில் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டதால் கொலை செய்தது தெரியவந்தது.

Updated On: 4 Jan 2021 11:41 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...