Begin typing your search above and press return to search.
வேளாங்கண்ணி அருகே ஸ்ரீ நந்தி நாதேஸ்வரர் ஆலய மாசி மக பிரமோற்சவ விழா
வேளாங்கண்ணி அருகே ஸ்ரீ நந்தி நாதேஸ்வரர் ஆலய மாசி மக பிரமோற்சவ விழா மிக விமரிசையாக நடந்தது.
HIGHLIGHTS
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த வடக்குபொய்கை நல்லூரில் பழமை வாய்ந்த ஸ்ரீ நந்தி நாதேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.இந்த ஆலயத்தின் மாசி மக பிரமோற்சவ பெருவிழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
ஆலயத்தின் முக்கிய நிகழ்ச்சியான ஊஞ்சல் உற்சவம் இன்று நந்திநாதேஸ்வரர்,சௌந்தர நாயகிஅம்மன் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் எழுந்தருளினர். சிவாச்சாரியார்கள் பக்தி பாடல்களை பாடினர். இதனையடுத்து, மஹாதீபாராதனை காண்பிக்கப்பட்டது, அதனை தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. முன்னதாக வர்ண விநாயகர் ஆலயத்தில் பெண்கள் சீர்வரிசை எடுத்து வந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தினர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.