/* */

நாகை நகராட்சியில் ராட்சத ட்ரோன் கருவி மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி: எம்எல்ஏ தொடங்கிவைத்தார்

நாகை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ராட்சத ட்ரோன் கருவி மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை எம்எல்ஏ ஷாநவாஸ் தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

நாகை நகராட்சியில் ராட்சத ட்ரோன் கருவி மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி: எம்எல்ஏ தொடங்கிவைத்தார்
X

நாகப்பட்டினம் நகராட்சி பகுதியில் ட்ரோன் கருவி மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணியை எம்எல்ஏ ஆளூர் ஷா நவாஷ் தொடங்கிவைத்தார.

நாகை மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாகை நகராட்சி சார்பாக ராட்சத ட்ரோன் கருவி மற்றும் நவீன கிருமி நாசினி தெளிப்பான் மூலம் நகரின் பல்வேறு பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கபட்டது.

தெற்கு பால்பண்ணைசேரி, டாட்டா நகர், உள்ளிட்ட நாகை நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை நாகை சட்டமன்ற உறுப்பினர் ஷாநவாஸ் தொடங்கி வைத்தார்.

சென்னையில் இருந்து வருகை தந்த அண்ணா பல்கலைகழக குழு மாணவர்கள் செயல்திட்டத்தில் உருவாக்கப்பட்ட ராட்சத ட்ரோன் மற்றும் நவீன கிருமி நாசினி தெளிப்பான் கருவிகள் வீதிகளில் கிருமி நாசினி தெளிப்பதை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். நிகழ்ச்சியில் திமுக நாகை மாவட்ட பொறுப்பாளர் கௌதமன் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

Updated On: 2 Jun 2021 1:57 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  2. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  3. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  4. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  5. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?
  6. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...
  7. கடையநல்லூர்
    தமிழகக் கேரள எல்லைப் பகுதியில் விளை நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு...
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் கோவை காவல் துறையினர் வழக்குப்பதிவு
  9. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!
  10. திருவள்ளூர்
    தனியார் நிதி நிறுவன ஊழியர் மீது மிளகாய் பொடி தூவி அரிவாள் வெட்டு!