நாகை நகராட்சியில் ராட்சத ட்ரோன் கருவி மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி: எம்எல்ஏ தொடங்கிவைத்தார்
நாகை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ராட்சத ட்ரோன் கருவி மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை எம்எல்ஏ ஷாநவாஸ் தொடங்கி வைத்தார்.
HIGHLIGHTS
நாகை மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாகை நகராட்சி சார்பாக ராட்சத ட்ரோன் கருவி மற்றும் நவீன கிருமி நாசினி தெளிப்பான் மூலம் நகரின் பல்வேறு பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கபட்டது.
தெற்கு பால்பண்ணைசேரி, டாட்டா நகர், உள்ளிட்ட நாகை நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை நாகை சட்டமன்ற உறுப்பினர் ஷாநவாஸ் தொடங்கி வைத்தார்.
சென்னையில் இருந்து வருகை தந்த அண்ணா பல்கலைகழக குழு மாணவர்கள் செயல்திட்டத்தில் உருவாக்கப்பட்ட ராட்சத ட்ரோன் மற்றும் நவீன கிருமி நாசினி தெளிப்பான் கருவிகள் வீதிகளில் கிருமி நாசினி தெளிப்பதை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். நிகழ்ச்சியில் திமுக நாகை மாவட்ட பொறுப்பாளர் கௌதமன் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.