Begin typing your search above and press return to search.
நாகையில் மாணவிகளுக்கு மஞ்சப்பை வழங்கினார் அமைச்சர் மெய்யநாதன்
நாகையில் நடந்த விழாவில் மாணவிகளுக்கு அமைச்சர் மெய்யநாதன் மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
HIGHLIGHTS
நாகை அடுத்துள்ள தெத்தி பகுதியில் இயங்கி வரும் இ.ஜி.எஸ் பிள்ளை கல்லூரியில் புதிய நவீன வசதிகள் கொண்ட செவிலியர் பயிற்சி பள்ளியை தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார். செவிலியர் பயிற்சி பள்ளியில் ஆய்வகம், வகுப்பறை, நூலகம், செய்முறை ஆய்வகம் உள்ளிட்டவைகளை திறந்து வைத்த அமைச்சர் மாணவிகள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது, மக்களுக்காக சேவை செய்யக்கூடிய இந்த துறையை தேர்தெடுத்த மாணவிகளுக்கு பாராட்டு தெரிவித்த அமைச்சர், தமிழக அரசின் பிளாஸ்டிக் ஒழிப்பு முன் நிறுத்தி கொண்டுவரப்பட மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை அறிமுகப்படுத்தி மாணவிகளுக்கு மஞ்சப்பைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கெளதமன், கல்லூரி செயலர் பரமேஸ்வரன், மற்றும் நிர்வாகத்தினர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.