/* */

நாகையில் கொரோனா நிவாரண நிதி வழங்கும் பணிகள் தொடக்கம்

நாகை மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு முதற்கட்ட நிவாரண நிதி இரண்டாயிரம் ரூபாய் வழங்கும் பணிகள் தொடக்கம்.

HIGHLIGHTS

நாகையில் கொரோனா  நிவாரண நிதி வழங்கும் பணிகள் தொடக்கம்
X

கொரோனா ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரம் இழந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு நான்காயிரம் ரூபாய் நிவாரண நிதி அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து முதற்கட்ட தவணையாக நாகையில் இன்று குடும்ப அட்டைதாரர்களுக்கு 2000 ரூபாய் கொரோனா நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நாகப்பட்டினம் பொதுப்பணியாளர் கூட்டுறவு பண்டகசாலை முன்பு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர், குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல் கட்ட தவணையாக 2000 ரூபாய் நிவாரண நிதியை வழங்கினார்.

பின்னர் கூறிய ஆட்சியர் பிரவீன் நாயர் மாவட்டம் முழுவதும் 95% டோக்கன் வழங்கும் பணி முடிவுற்று உள்ளதாகவும், நாகை வேதாரண்யம் கீழ்வேளூர் திருக்குவளை ஆகிய நான்கு தாலுகாவில் உள்ள 356 நியாயவிலை கடைகளில் 2 லட்சத்து பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு இன்று முதல் 2000 ரூபாய் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.கீழ்வேளூர் சட்ட மன்ற உறுப்பினர் நாகை மாலி திமுக மாவட்ட பொறுப்பாளர் கௌதமன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 15 May 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை நினைத்து ஏங்கும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. மயிலாடுதுறை
    ஏவிசி கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா..!
  3. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்
  4. வீடியோ
    Road- ட கூறுபோட்ட நாட்டையும் கூறுபோட்டு வித்துடுவ !#seeman...
  5. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  6. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  7. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  8. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்
  10. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....