Begin typing your search above and press return to search.
நாகையில் 1,113 பயனாளிகளுக்கு கலெக்டர் நலத்திட்ட உதவி வழங்கினார்
நாகையில் 1,113 பயனாளிகளுக்கு 37 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கினார்.
HIGHLIGHTS
அமைப்புசாரா தொழிலாளர் நலத்துறை சார்பாக நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ், நாகை சட்டமன்ற உறுப்பினர் ஷாநவாஸ் ஆகியோர் 1113 பயனாளிகளுக்கு 37 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, நீண்ட நாள் ஓய்வூதியம் பெறாமல் இருந்தவர்கள், விபத்து மற்றும் இயற்கையாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் என ஏராளமானோர் பயனடைந்தனர். விபத்து நடந்து 10 நாட்களில் நிவாரணம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.