Begin typing your search above and press return to search.
மீன்பிடி மற்றும் சரக்கு கப்பலில் பணியின் போது உயிரிழந்த மாலுமிகள் குடும்பத்துக்கு நிதியுதவி
மீன்பிடி மற்றும் சரக்கு கப்பலில் பணியின்போது உயிரிழந்த கப்பல் மாலுமிகள் குடும்பத்தினக்கு இன்று நாகையில் நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
HIGHLIGHTS
நாகை மாவட்ட மாலுமிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கப்பலில் உயிரிழந்த நாகையை சேர்ந்த ரவிக்குமார், ரகுநாதன், ரகு, ரமேஷ், பாஸ்கரன் ஆகியோரின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் வீதம் 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினர். அதனை தொடர்ந்து உயிரிழந்த கப்பல் மாலுமிகளுக்கு அனைவரும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.