/* */

வேளாங்கண்ணியில்  கல்லறைத் திருநாளை  முன்னிட்டு சிறப்பு திருப்பலி

கிறிஸ்தவர்களின் கல்லறை திருநாளையொட்டி வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டது.

HIGHLIGHTS

வேளாங்கண்ணியில்   கல்லறைத் திருநாளை   முன்னிட்டு சிறப்பு திருப்பலி
X

கல்லறை திருநாளையொட்டி வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை மாதா ஆலயத்தில்  சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி நடந்தது.

இறந்த முன்னோர்களின் ஆன்மாவிற்கு மரியாதை செலுத்தும் தினமாக கல்லறை திருநாளை கிறிஸ்தவர்கள் கடை பிடித்து வருகிறார்கள். அதன்படி இன்று கல்லறை திருநாள் கடைபிடிக்கப்பட்டது.இதில் கிறிஸ்தவர்கள் முன்னோர்களின் கல்லறைகளை பூக்களால் அலங்கரித்து, உணவுப்பண்டங்களை வைத்து படையலிட்டு, சிறப்பு வழிபாடு நடத்தினர்.

அதன்படி நாகப்பட்டினம் மாவட்டம் உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் சிறப்புத்திருப்பலி நடைபெற்றது. இதில் வெளி மாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள்கலந்து கொண்டு பேராலயத்தை சுற்றி அடக்கம் செய்யப்பட்ட பாதிரியார்களின் சமாதிக்கு பேராலய அதிபர் பிரபாகர் தலைமையில் புனிதம் செய்யப்பட்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து வேளாங்கண்ணியில் கடந்த 2004ம் ஆண்டு சுனாமியால் இறந்த பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆயிரம் பேர் கிழக்கு கடற்கரைசாலை ஆர்ச் அருகில் புதைக்கப்பட்ட கல்லறைத் தோட்டத்தில் கல்லறைத்திருநாள் வழிபாடு நடத்தினர்.


Updated On: 2 Nov 2021 5:13 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  2. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  3. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...
  4. வீடியோ
    ஜின்னாவின் பிளவு மனப்பான்மையில் பயணிக்கும்...
  5. தொழில்நுட்பம்
    எச்.எம்.டி பல்ஸ்: சுயமாக சரிசெய்யும் ஸ்மார்ட்போன்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  7. ஈரோடு
    தாளவாடி அருகே வனத்துறை வைத்த கூண்டில் சிக்கிய ஆண் சிறுத்தை
  8. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு விழா
  9. சினிமா
    உண்டா: யதார்த்தத்தின் அழுத்தமான பிரதிபலிப்பு!
  10. வீடியோ
    பைபிள்படி ஆட்சியை நடத்துவோம் !Congress கொடுத்த வாக்குமூலம்!#congress...