/* */

மதுரையில் பெண்களை ஏமாற்றி பாலியல் தொழில்; 5 புரோக்கர்கள் கைது

மதுரையில் பெண்களை ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபட வைத்த 5 புரோக்கர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

HIGHLIGHTS

மதுரையில் பெண்களை ஏமாற்றி பாலியல் தொழில்; 5 புரோக்கர்கள் கைது
X

கைது செய்யப்பட்ட 5 புரோக்கர்கள்.

மதுரை மாவட்டம், நாகமலை புதுக்கோட்டை அடுத்துள்ள மேலக்குயில்குடி பகுதியில் வாகன பழுதுபார்க்கும் நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு, இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடைபெறுவதாக மதுரை நாகமலை புதுக்கோட்டை போலீசாருக்கு, பெண்கள் நல அமைப்பினரிடம் இருந்து தகவல் கிடைத்தது.

இதனையடுத்து போலீசார் அப்பகுதியில் கண்காணித்தபோது, அங்கு பாலியல் தொழில் நடைபெறுவது உறுதியானது. உடனடியாக அப்பகுதியை சுற்றிவளைத்த போலீசார், பாலியல் தொழிலில் ஈடுபட்ட புரோக்கர்களான ரமேஷ், சக்தி சரவணன், கார்த்திக், குமார், கார்த்திகேயன் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர். மேலும், அங்கிருந்த இரு இளம்பெண்களை மீட்டு தனியார் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

அவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அதிக சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக பெண்களை ஏமாற்றி அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபட வைத்தது தெரியவந்தது. மேலும், 5 புரோக்கர்களையும் கைது செய்த நாகமலைபுதுக்கோட்டை போலீசார், அவர்களிடமிருந்து சொகுசு கார் ஒன்றையும் பறிமுதல் செய்து, விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Updated On: 4 Aug 2021 6:34 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  2. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  3. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  4. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  6. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  7. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  8. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  9. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  10. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!